மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தம்பதி படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தம்பதி படுகாயம்
x

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் தம்பதி படுகாயமடைந்தனர்.

அரியலூர்

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், செந்துறை சென்னிவனம் நடுத்தெருவை சேர்ந்த கதிர்வேலின் மகன் சுவாமிநாதன்(வயது 33). இவர் ஒரு தனியார் சிமெண்டு ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா (32). மகன் விஷ்வா. இவர்கள் 3 பேரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் அரியலூர் நோக்கி சென்றனர். அரசு நகர் பகுதியில் சென்றபோது எதிரே உடையார்பாளையம் பருக்கள் தெற்கு தெருவை சேர்ந்த கொளஞ்சிநாதன்(40) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சுவாமிநாதனின் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் சுவாமிநாதன், அவரது மனைவியும் படுகாயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து கயர்லாபாத் போலீசில் சுவாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story