மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
x

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள காக்காபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 32). இவர் ஆயுத பூஜையையொட்டி நல்லாம்பாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் இவர் தனது மோட்டார் பைக்கிள் செந்துறைக்கு சென்றுள்ளார். நல்லாம்பாளையம் தாண்டான்குளம் அருகே சென்றபோது அவரது மோட்டார் சைக்கிளும், அதே ஊரை சேர்ந்த காமராஜ் என்பவரது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் அவர்கள் பலத்த காயமடைந்தனர். உறவினர்கள் காமராஜை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சரவணனை 108 ஆம்புலன்ஸ் மூலம் செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story