தூத்துக்குடியில் வருகிற 28-ந் தேதி மின்தடை


தூத்துக்குடியில் வருகிற   28-ந் தேதி மின்தடை
x

தூத்துக்குடியில் வருகிற 28-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. எனவே, அன்றையதினம் மேற்கண்ட நேரங்களில் மடத்தூர், சிப்காட் வளாகம், ராஜீவ்நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், தபால் தந்தி குடியிருப்புகள், ராஜகோபால்நகர், 3-வது மைல், பத்திநாதபுரம், சங்கர் காலனி, இந்திய உணவுக்கழக குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், இ.பி.காலனி, டைமண்ட் காலனி, மதுரை பைபாஸ் ரோடு, ஏழுமலையான்நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், பாலையாபுரம் வி.எம்.எஸ்.நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், பால்பாண்டி நகர், ஆசீர்வாத நகர், முத்துநகர், கந்தன் காலனி, காமராஜ்நகர், சின்னக்கண்ணுபுரம், பாரதிநகர், புதூர்பாண்டியாபுரம், முருகேசநகர், அகில இந்திய வானொலி நிலையம், கதிர்வேல் நகர், ஹரிராம் நகர், கணேஷ்நகர், அமுதாநகர், புஷ்பாநகர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story