இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தேனி பழைய பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

தேனி


தேனி பழைய பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில துணைச்செயலாளரும், தேசிய குழு உறுப்பினருமான வீரபாண்டியன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் அரசகுமாரன் தலைமை தாங்கினார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் திருமலைக்கொழுந்து, ராஜ்குமார், பெத்தாட்சி ஆசாத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.


Next Story