கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா


கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
x

திருச்செங்கோட்டில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

நாமக்கல்

எலச்சிபாளையம்

திருச்செங்கோட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நகர்புறம் மற்றும் வட்டார குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தினர் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 50 கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர். நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து பரிசு பொருட்களை வழங்கினார். விழாவில் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி பணிகள் அலுவலர் வித்யாலட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர், அருள் குகன், நகர்நல அலுவலர் மணிவேல், மருத்துவர் ஷர்மிளா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story