கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி


கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

சாக்கோட்டை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சங்கராபுரம் ஊராட்சி, இலுப்பக்குடி ஊராட்சி சமுதாய கூடங்களில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலர் சூர்யா வரவேற்றார். .சாக்கோட்டை யூனியன் சேர்மன் சரண்யா செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.

இதில், மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசு, வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர் ஆனந்தராஜ், டாக்டர் சமீம், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சுதா, மேற்பார்வையாளர்கள் சோலையம்மா, கோமதி மற்றும் சாக்கோட்டை ஒன்றிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story