புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 8 Feb 2023 6:45 PM GMT (Updated: 8 Feb 2023 6:45 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.காவனூர் கிராமத்தில் இருந்து பரமக்குடிக்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த வழியாக பயணிக்கும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சக்தி, எஸ்.காவனூர்.

பயன்பாட்டிற்கு வருமா?

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டண கழிப்பறை பொதுமக்கள் பயன்பாடு இல்லாமல் பல மாதங்களாக பூட்டிய நிலையில் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கழிப்பறையின்றி பெரிதும் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமசாமி, பாம்பன்.

போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் அதிக வாகனங்கள் பயணிக்கின்றன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு இடையே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகேந்திரன், முதுகுளத்தூர்.

நோயாளிகள் சிரமம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் குறிப்பிட்ட அளவே டாக்டர்கள் உள்ளனர். இதனால் இங்கு வரும் நோயாளிகள் காத்திருந்து பரிசோதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே இந்த ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

காதர்மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சி நகரி பகுதியில் சிலர் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே சாலையில் நிறுத்துகின்றனர். இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் எதிர்பாராதவிதமாக விபத்துகள் நேரிட வாய்ப்பு உள்ளது. எனவே சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திகேயன், ஆர்.எஸ்.மங்கலம்.


Next Story