புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 26 Feb 2023 6:45 PM GMT (Updated: 26 Feb 2023 6:46 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

பஸ் நின்று செல்லுமா?

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மரைக்காயர்பட்டினம் ஊராட்சி மதுரை-ராமேசுவரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பஸ் நிறுத்தம் இல்லை. மேலும் எந்த பஸ்களும் நின்று செல்வதில்லை. இதனால் இந்த பகுதியை சுற்றியுள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் பஸ் நிறுத்தம் அமைத்து பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஜ்மல், மரைக்காயர் பட்டினம்.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரத்தில் ஆங்காங்கே ஒரு சில மின்கம்பங்களில் உள்ள தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே அனைத்து தெருவிளக்குகளும் எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, ராமநாதபுரம்.

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், முதுகுளத்தூர்.

பஸ் வசதி வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்திலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, ஆர்.எஸ்.மங்கலம்.

அச்சுறுத்தும் குரங்குகள்

ராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினம் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இந்த குரங்குகள் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்துகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள குரங்குகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பாசிப்பட்டினம்.


Next Story