புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 5 March 2023 6:45 PM GMT (Updated: 5 March 2023 6:46 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் கடம்பங்குளம் கிராமத்தில் புதூர் தெருவில் உள்ள குளியல் தொட்டியில் தண்ணீரில்லை. மேலும் அருகில் மின்விளக்கும் இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கடம்பங்குளம்.

ஆபத்தான மின்கம்பம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்துராஜபுரம் பஞ்சாயத்து சங்கர்நகரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவ்வழியே செல்லும் போது அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெ.குமாரவேல், சிவகாசி.

மாணவர்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி, பெருமாள்தேவன்பட்டி, நூர்சாகிபுரம் ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யம்பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர்.

மின்விளக்கு வசதி வேண்டும்

விருதுநகர் பகுதியில் உள்ள சில தெருக்களில் போதிய அளவு மின்விளக்கு இல்லை. இதனால் அப்பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விருதுநகர்.

நாய்கள் தொல்லை

விருதுநகர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜவேல், விருதுநகர்.


Next Story