புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 2 April 2023 6:45 PM GMT (Updated: 2 April 2023 6:45 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தாலுகா பாம்பன் ஊராட்சியில் உள்ள சின்னப்பாலம் தெருவிற்கு செல்லக்கூடிய சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரியா, பாம்பன்.

எரியாத தெருவிளக்கு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சில தெருக்களில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் எரியாத பகுதிகளில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராமேசுவரம்.

குடிநீர் தட்டுப்பாடு

ராமநாதபுரம் நகர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக நிறுவப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதடைந்து குடிநீர் வசதி இன்றி மக்கள் பெரிதும் அல்லல்படும் நிலை உள்ளது. கோடை காலம் என்பதால் அதிகாரிகள் இதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

தெருநாய்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்களின் மீது மோதுவதால் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பரமக்குடி.

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் தேவிப்பட்டினம் முதல் திருப்பாலைக்குடி வரை உள்ள சாலையின் இருபுறமும் கருவேல மரங்களும், முட்செடிகளும் வளர்ந்து உள்ளன. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையில் இருபுறமும் உள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுல்தான் செய்யது, பெரியசம்மை.


Next Story