தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆக்கிரமிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏராளமான கண்மாய்களில் கருவேல மரங்களும் முட்புதர்களும் நிறைந்து ஆக்கிரமித்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கண்மாயில் நீரை சேமிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
பொதுமக்கள், சிவகங்கை.
சுகாதார சீர்கேடு
சிவகங்கை நகர் பகுதிகளில் ஆங்காங்கே சாலையில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி உள்ளன. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அவ்வப்போது அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகங்கை.
சேதமடைந்த சாலை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
குமார், காரைக்குடி.
பொதுமக்கள் அச்சம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதர்சன், இளையான்குடி.
விபத்து அபாயம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் ஊராட்சி வைகைவடகரை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகில் ஆபத்தான வகையில் மரக்கிளைகள் உள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி அருகில் ஆபத்தை ஏற்படுத்தும் உள்ள மரக்கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திகேயன், மடப்புரம்.






