புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 2 July 2023 6:45 PM GMT (Updated: 2 July 2023 6:46 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

நடவடிக்கை எடுப்பார்களா?

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் உள்ள ஒரு சில இடங்களில் சாலையில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே குப்பைகள் தேங்காமல் அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், பரமக்குடி.

பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. சாலையில் நடந்து செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் சிலர் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஆர்.எஸ்.மங்கலம்.

குண்டும், குழியுமான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் ஒருசில இடங்களில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், முதுகுளத்தூர்.

ஆக்கிரமிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதற்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனி ஜலாலுதீன், பெரியபட்டினம்.

குடிநீர் வசதி வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏ.கே.எஸ். தோப்பில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சீராக குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மண்டபம்.


Next Story