குழந்தை தொழிலாளர் குறித்து புகார் தெரிவிக்கலாம்


குழந்தை தொழிலாளர் குறித்து புகார் தெரிவிக்கலாம்
x

நாமக்கல்லில் குழந்தை தொழிலாளர் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பை சிறப்பாக நடைமுறைபடுத்தும் வகையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த ஆண்டு மாநில அளவிலான கட்டுப்பாட்டு மையம் சென்னையில் அமைக்கப்பட்டது.

மேலும் கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான புகார் அளிக்க இலவச செல்போன் எண் 1800 4252 650 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. தற்போது கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில், பி.எஸ்.என்.எல்., மூலம் 155214 என்ற கட்டணமில்லா எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு உள்ளது.

கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணிலும், கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு உள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story