ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்


ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்
x

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள அரியலூர் ஒன்றிய ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவி, ஆண்டிமடம் ஒன்றிய இடையக்குறிச்சி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவி, சிலம்பூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவி, ஜெயங்கொண்டம் ஒன்றிய கழுவந்தோண்டி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவி, மேலணிக்குழி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவி, செந்துறை ஒன்றிய நாகல்குழி ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவி, துளார் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவி, தா.பழூர் ஒன்றிய சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவி, தென்கட்சி பெருமாள்நத்தம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவி, திருமானூர் ஒன்றிய கீழக்காவாட்டாங்குறிச்சி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவி ஆகிய பதவிகளுக்கு ஜூலை மாதம் 9-ந்தேதி தற்செயல் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கழுவந்தோண்டி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பெண் ஒருவரும், சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பெண்களும், வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் கீழக்காவாட்டாங்குறிச்சி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட பெண் ஒருவரும், மேலணிக்குழி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆண் ஒருவரும், கழுவந்தோண்டி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பெண் ஒருவரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 27-ந்தேதி ஆகும். மேலும் அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் தொடர்பான புகார்களை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையின் 04329- 228902 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story