1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
களியக்காவிளை,
களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலையில் போலீசார் மடிச்சல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சொகுசு காரை மடக்கி நிறுத்தினர். உடனே டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து காரை சோதனை செய்தபோது அதில் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர். காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும், அரிசியை காப்புகாடு அரசு குடோனிலும் ஒப்படைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





