காரில் கடத்திய 120 கிலோ குட்கா பறிமுதல்


காரில் கடத்திய 120 கிலோ குட்கா பறிமுதல்
x

கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்திய 120 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சிப்காட் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 120 கிலோ தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான குட்கா இருப்பது தெரியவந்தது. காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் சேலம் ஜாாி கொண்டலாம்பட்டியை சேர்ந்த கார் உரிமையாளர் மணிகண்டன் (வயது 35), டிரைவா் தமிழரசன் (30) என்பதும், இவர்கள் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து குட்காவை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குட்கா, காரை பறிமுதல் செய்தனர். தொடா்ந்து மணிகண்டன், தமிழரசன் (30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story