திண்டிவனம் அருகேகாரில் கடத்திய ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்2 பேர் கைது


திண்டிவனம் அருகேகாரில் கடத்திய ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்2 பேர் கைது
x
தினத்தந்தி 31 March 2023 6:45 PM GMT (Updated: 31 March 2023 6:47 PM GMT)

திண்டிவனம் அருகே காரில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

வாகன சோதனை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவழகி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து வேலூர் மார்க்கமாக வந்த காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காருக்குள் 37 அட்டை பெட்டிகளில் 1344 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வாலிபர்கள் 2 பேர் கைது

இதையடுத்து போலீசார், காரில் வந்த 2 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூர் அடுத்த சம்பந்தனூரை சேர்ந்த விக்ரம்(வயது 22), வடக்கரிமலூரை சேர்ந்த பிரகாஷ்(25) என்பதும், புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு காரில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கடத்தி வந்தபோது சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள கார் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story