மதுபாட்டில்கள் பறிமுதல்


மதுபாட்டில்கள் பறிமுதல்
x

மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர்

விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் கொலையனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கொலையனூர் கீழத்தெருவை சேர்ந்த நாகரத்தினம் (39) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நாகரத்தினத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story