வீட்டுக்குள் புகுந்த பாம்புகளால் பரபரப்பு


வீட்டுக்குள் புகுந்த பாம்புகளால் பரபரப்பு
x

வீட்டுக்குள் புகுந்த பாம்புகளால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தை சேர்ந்தவர் ராஜதிலகம். இவரது வீட்டில் நேற்று திடீரென 2 பாம்புகள் புகுந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜதிலகம் உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து, வீட்டிற்குள் இருந்த 2 பாம்புகளையும் லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்புகளை அன்னமங்கலம் வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.


Related Tags :
Next Story