காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சோளிங்கரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராணிப்பேட்டை
ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து சோளிங்கர் பஸ்நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். நகர தலைவர் டி.கோபால் வரவேற்று கண்டன உரையாற்றினார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.
மாவட்ட செயலாளர் மோகன்குமார், மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு துணைத் தலைவர் மணிவேலு, ஒன்றிய தலைவர்கள் கார்த்தி, செல்வம், உதயகுமார், வழக்கறிஞர் ஒய்.சி.ரகுராம்ராஜ் மற்றும் கல்பனா, பிரவீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story