காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

லத்தேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து கே.வி.குப்பம் ஒன்றிய காங்கிரஸ் கட்சியினர் லத்தேரி பஸ் நிலையத்தில் நேற்று இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கே.வி.குப்பம் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் நீலகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் ஜெகன்நாதன், ஒன்றிய தலைவர் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் சித்தரஞ்சன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார். இதில் வேலூர் மாநகர தலைவர் டீக்காரராமன், மாவட்ட தலைவர் சுரேஷ், இளைஞர் அணி தலைவர் விக்ரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story