காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறித்ததை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது. வேலூர் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் அருகே உள்ள தேசிய வங்கி முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று தேசிய வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையொட்டி அங்கு முன்எச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா தலைமையிலான போலீசார் காங்கிரஸ் கட்சியினரிடம் வங்கியை முற்றுகையிட முயன்றால் கைது செய்வோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் வங்கியின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார். எஸ்.சி., எஸ்.டி. மாநில பொதுச்செயலாளர் சித்தரஞ்சன், மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிறுபான்மைபிரிவு மாவட்ட தலைவர் வாகித்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ராகுல்காந்தி எம்.பி. பதவி பறித்ததை கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் கட்சி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினார்கள்.


Next Story