பிரம்மபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு


பிரம்மபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 10 Sep 2023 7:15 PM GMT (Updated: 10 Sep 2023 7:15 PM GMT)

பிரம்மபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே சீயாத்தமங்கையில் உள்ள இருமலர் கண்ணி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த சில நாட்களாக யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று 6-ம் கால யாக சாலை பூஜைக்கு பின்னர் கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.


Next Story