படுநெல்லி ஊராட்சியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி


படுநெல்லி ஊராட்சியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி
x

படுநெல்லி ஊராட்சியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை காஞ்சீபுரம் எம்.பி., எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் படுநெல்லி ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி எழிலரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜலட்சுமி குஜராஜ், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு, ஒன்றிய குழு உறுப்பினர் சுனிதா பாபு, ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story