கொரோனாவால் கட்டுமான பணிகள் பாதிப்பு: கூடுதலாக 2 ஆண்டுகள் அவகாசம் - தமிழக அரசு முடிவு


கொரோனாவால் கட்டுமான பணிகள் பாதிப்பு: கூடுதலாக 2 ஆண்டுகள் அவகாசம் - தமிழக அரசு முடிவு
x
தினத்தந்தி 21 Dec 2022 4:37 AM GMT (Updated: 21 Dec 2022 4:39 AM GMT)

கொரோனா பாதிப்பை ஈடுகட்ட கட்டிடங்கள் கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக 2 ஆண்டுகள் அவகாசம் வழங்குவதாக வீட்டுவசதித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா பாதிப்பை ஈடுகட்ட கட்டிடங்கள் கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக 2 ஆண்டுகள் அவகாசம் வழங்குவதாக வீட்டுவசதித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அமலில் உள்ள ஒருங்கிணைந்த கட்டிட விதிகள் படி தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, முதலில் 5 ஆண்டுகள் அனுமதியளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா கால​த்தில் தளர்வுகள் வழங்கப்பட்டாலும், கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, கட்டிட அனுமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என கட்டுமான நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கை அடிப்படையில், குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் கட்டிட அனுமதி பெற்றவர்களின் அனுமதிக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் இழப்பை கருத்தில் கொண்டு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக வீட்டுவசதித்துறை தெரிவித்துள்ளது.


Next Story