கட்டிட தொழிலாளி மர்மசாவு


கட்டிட தொழிலாளி மர்மசாவு
x
தினத்தந்தி 10 Aug 2023 6:45 PM GMT (Updated: 10 Aug 2023 6:45 PM GMT)

கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மேற்கு பகுதியில் உள்ள இந்திராநகரை சேர்ந்தவர் சுப்புராஜ் என்கிற தக்காளி (வயது 45). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் சுப்புராஜ் இந்திராநகர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுப்புராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சுப்புராஜ் மனைவி வேலம்மாள் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story