கட்டிட தொழிலாளி தற்கொலை


கட்டிட தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 1 Dec 2022 6:45 PM GMT (Updated: 1 Dec 2022 6:46 PM GMT)

சாத்தான்குளம் அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

உடன்குடி அருகே கோடன்விளையைச் சேர்ந்தவர் முருகன் மகன் மணிகண்டன் (வயது 22). கட்டிட தொழிலாளியான இவர் சாத்தான்குளம் பகுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் மனமுடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story