காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்


காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 6 March 2023 8:05 PM GMT (Updated: 7 March 2023 10:31 AM GMT)

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

புதுக்கோட்டை

விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா அலுவலகத்தில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமை தாங்கினார். விராலிமலை தாசில்தார் சதீஸ், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட தாசில்தார் ஆரமுத தேவசேனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை சட்டத்தின் கீழ் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக குன்னத்தூர் வட்டம் கலிமங்கலம் பகுதியில் நிலம் எடுப்பது தொடர்பாக அதிகாரிகள், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர். அப்போது சிலர் இத்திட்டத்தின் வழித்தடத்தை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை தெரிவித்து, தங்களது கோரிக்கைகளாக வைத்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் கூறினார். இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஆனந்தகுமார், தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன், விராலிமலை வருவாய் ஆய்வாளர் சுரேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story