குற்றச்செயல்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம்


குற்றச்செயல்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
x

குற்றச்செயல்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

கறம்பக்குடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் முருகேசன் மற்றும் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கிராமப்புற ஊராட்சிகளில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பணியாற்றும் போலீசாருக்கு ஊராட்சி மன்ற தலைவர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் அனைத்து ஊராட்சி பகுதியிலும் முக்கிய இடங்களில் 100 கண்காணிப்பு கேமராக்களை வருகிற 10-ந் தேதிக்குள் பொருத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.


Next Story