நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி


நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆலத்தூர் வட்ட வழங்க அலுவலர் ஜெயராமன் கலந்து கொண்டு பேசினார். பெரம்பலூர் மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கதிரவன் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்தும், செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகள் குறித்தும், நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும் பொழுது தரமான பொருட்களாகவும், அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தர முத்திரைகளை பார்த்து வாங்க வேண்டும், தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ரேஷனில் வழங்கப்படும் அரிசியினை எக்காரணத்தை கொண்டும் கால்நடைகளுக்கு அல்லது வேறு நபர்களுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தால் தக்க நடவடிக்கை அரசு அதிகாரிகளால் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, எரிவாயு சிலிண்டரை நுகர்வோர்கள் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியை- ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story