மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
மானாமதுரையில், இன்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது
சிவகங்கை
மானாமதுரை கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மானாமதுரையில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் நடைபெறுகிறது. எனவே மானாமதுரை கோட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர் மற்றும் விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து பயன் அடையலாம். இத்தகவலை மேற்பார்வை பொறியாளர் குருசாமி தெரிவித்துள்ளார்
Related Tags :
Next Story