மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தேவகோட்டையில் இன்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது
சிவகங்கை
தேவகோட்டை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதன்படி காலை 11 மணி முதல் 1 மணி வரை தேவகோட்டையில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் நடக்கிறது. எனவே தேவகோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம். இந்த தகவலை மேற்பார்வை பொறியாளர் குருசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story