மின்சாரம் இல்லாததால் கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருந்த நுகர்வோர்கள்


மின்சாரம் இல்லாததால் கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருந்த நுகர்வோர்கள்
x

மின்சாரம் இல்லாததால் கட்டணம் செலுத்த முடியாமல் நுகர்வோர்கள் காத்திருந்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மின்சார வாரியத்துக்கு உட்பட்ட நான்கு ரோடு அருகே உள்ள மின் கட்டணம் செலுத்தும் அலுவலகத்தில் நேற்று காலை முதல் மதியம் வரை மின்சாரம் இல்லை. இதனால் மின் நுகர்வோர்கள் கட்டணம் செலுத்த முடியாமல் காத்து கிடந்ததோடு கடும் அவதிக்குள்ளாயினர். ஆனால் அங்குள்ள அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளவில்லை என்று மின் நுகர்வோர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கையை தொடர்ந்து மதியத்துக்கு பிறகு அலுவலகத்திற்கு மின்சாரம் வந்தது. இதையடுத்து மின் நுகர்வோர்களிடம் இருந்து மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மின் கட்டணம் செலுத்தும் அலுவலகத்தில் கணினிகளில் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும், அதனையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மின் நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story