வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x

ராசிபுரத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர்.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் ஒரு மனு மீது விவரம் கேட்பதற்காக வக்கீல் பூபதி என்பவர் துணைபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றார். வக்கீல் உடன் மனுதாரரும் சென்றதாக கூறப்படுகிறது. துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரை சந்திக்கச் சென்ற வக்கீல் பூபதியை அவமரியாதையாகவும், ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி அவர் சக வக்கீலிடம் கூறினார். இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டை கண்டித்து ராசிபுரத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றத்தை சேர்ந்த வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர்.


Next Story