மலையோர பகுதிகளில் மழை நீடிப்பு


மலையோர பகுதிகளில் மழை நீடிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மலையோர பகுதிகளில் மழை நீடிப்பு சிற்றார் 1 அணை பகுதியில் 12.4 மில்லி மீட்டர் பதிவு

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் மலையோர பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிற்றார் 1 அணை பகுதியில் 12.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதுபோல் பிற இடங்களில் பெய்த மழை விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பூதப்பாண்டி-1.4, களியல்-2, குழித்துறை-4, பேச்சிப்பாறை-11.8, பெருஞ்சாணி-4, புத்தன்அணை-2.6, சிற்றார் 2-9.2, தக்கலை-2, மாம்பழத்துறையாறு-1, குருந்தன்கோடு-8.4, முள்ளங்கினாவிளை-4 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,054 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 195 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 44 கனஅடி தண்ணீரும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 64 கனஅடி தண்ணீரும் வந்தது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 788 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும் பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story