தொடர் மின்வெட்டு: சாலை மறியலில் குதித்த மக்கள் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு


தொடர் மின்வெட்டு: சாலை மறியலில் குதித்த மக்கள் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
x

ரிஷிவந்தியத்தில் அறிவிக்கப்படாத மற்றும் தொடர் மின்வெட்டை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி,

ரிஷிவந்தியத்தில் அறிவிக்கப்படாத மற்றும் தொடர் மின்வெட்டை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் கடந்த சில மாதங்களாகவே, பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் தொடர் மின் வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக புகார் மனு அளிக்குமாறும், சம்பந்தப்பட்ட துறை நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.

இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அதேவேளையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story