ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்

மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூர்:-
மேட்டு நகராட்சியில் சுமார் 100 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு உரிய சம்பளம் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதில்லை எனக்கூறி கடந்த 17-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்தத்தை தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சின்னப்பார்க் அருகே ஒன்று கூடி அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





