தண்டனை கைதி திடீர் சாவு

தண்டனை கைதி திடீரென உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் கீரனூர் வயலப்பாடி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 77). இவர் கடந்த 2019-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம், குன்னம் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக சிறை காவலர்கள் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





