விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

அம்மாப்பேட்டை அருகே விஷம் குடித்து ெதாழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை;

அம்மாப்பேட்டை அருகே அருந்தவபுரம் ஊராட்சி, உத்தமர்குடி கிராமம், மூப்பனார் தெருவை சேர்ந்தவர் ராமையன்(வயது60). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் மன வேதனை அடைந்த ராமையன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமையன் உயிரிழந்தார். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்


Next Story