20 மாவட்டங்களில் பாதிப்பு தமிழகத்தில் 249 பேருக்கு கொரோனா


20 மாவட்டங்களில் பாதிப்பு தமிழகத்தில் 249 பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் நேற்று 249 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 20 மாவட்டங்களில் பாதிப்பு பதிவாகியுள்ளது.

சென்னை,

புதிதாக 14 ஆயிரத்து 16 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 137 பேரும், பெண்கள் 112 பேரும் உள்பட 249 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 124 பேர், செங்கல்பட்டில் 40 பேர், கோவையில் 20 பேர் உள்பட 20 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 18 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 15 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 48 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 மாவட்டங்கள் மட்டுமே கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உள்ளது. இந்த மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்றும் இல்லை, சிகிச்சையிலும் யாரும் இல்லை.

சிகிச்சையில் 1,332 பேர்

தமிழகத்தில் 87-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 1,332 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 733 பேரும், செங்கல்பட்டில் 215 பேரும் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் 75 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

148 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 18 ஆயிரத்து 25 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story