பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 21 பேருக்கு கொரோனா


பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 21 பேருக்கு கொரோனா
x

பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 35 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 33 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 8 பேர், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் 2 பேர், ஆத்தூர், ஏற்காடு, ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.

மேலும் சேலத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த 8 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 5 பேர், கிருஷ்ணகிரி மற்றும் ஈரோட்டில் இருந்து வந்த தலா 4 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story