715 பெண்கள் உள்பட தமிழகத்தில் 1,461 பேருக்கு கொரோனா


715 பெண்கள் உள்பட தமிழகத்தில் 1,461 பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் நேற்று புதிதாக 746 ஆண்கள், 715 பெண்கள் என மொத்தம் ஆயிரத்து 461 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 746 ஆண்கள், 715 பெண்கள் என மொத்தம் ஆயிரத்து 461 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 543 பேர், செங்கல்பட்டில் 240 பேர், கோவையில் 189 பேர் உள்பட 36 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 2 மாவட்டங்களில் மட்டும் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை. மேலும், 12 வயதுக்குட்பட்ட 83 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 228 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் 404 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.

தமிழகத்தில் கொரோனாவே இல்லாத மாவட்டங்கள் என இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 8 ஆயிரத்து 222 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 3 ஆயிரத்து 616 பேரும், செங்கல்பட்டில் ஆயிரத்து 443 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story