தமிழகத்தில் 1,827 பேருக்கு கொரோனா; அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு


தமிழகத்தில் 1,827 பேருக்கு கொரோனா; அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு
x

தமிழகத்தில் நேற்று 1,827 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு பதிவாகியுள்ளது.

சென்னை,

நேற்று புதிதாக 25 ஆயிரத்து 657 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 995 பேரும், பெண்கள் 832 பேரும் உள்பட 1,827 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 771 பேர், செங்கல்பட்டில் 316 பேர், திருவள்ளூரில் 134 பேர், கோவையில் 85 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 70 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 286 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சையில் 10 ஆயிரம் பேர்

தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.

நேற்றைய நிலவரப்படி 10 ஆயிரத்து 33 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 4 ஆயிரத்து 300 பேரும், செங்கல்பட்டில் 1,738 பேரும், கோவையில் 647 பேரும், திருவள்ளூரில் 583 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் 450 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 764 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 25 ஆயிரத்து 57 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story