கடலூர் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா


கடலூர் மாவட்டத்தில்     புதிதாக 5 பேருக்கு கொரோனா
x

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கடலூர்


கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 75 ஆயிரத்து 955 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த 2 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் 3 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இது வரை 75 ஆயிரத்து 2 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றனர். நேற்று ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கொரோனா பாதிக்கப்பட்ட 59 பேர் கடலூர் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் வெளி மாவட்ட ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story