அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா


x

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.சென்னை,

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வந்த நிலையில்,இன்று கொரோனா தொற்று இரண்டாயிரத்துக்கும் கீழ் சரிந்துள்ளது.

இந்நிலையில்,சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 0 மாணவர்களை பரிசோதனை செய்ததில் தற்போது 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் 6 மாணவர்களும் தனிமைப் படுத்தப்பட்டுளனர் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக,சென்னை ஐஐடியில் இதே போல் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது,அதனைத் தொடர்ந்து,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story