தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று
![தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று](https://media.dailythanthi.com/h-upload/2022/05/31/715015-tamilnadu-corona33.webp)
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 89 இல் இருந்து 98 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்றையகொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 33 இல் இருந்து 44 ஆக அதிகரித்துள்ளது.
இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,55,474 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,16,907ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.
தமிழகம் முழுவதும் 542 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.