1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x

1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

ஈரோடு

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உட்பட மொத்தம் 1,597 மையங்களில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 196 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் 70 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட்டது. முகாமில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசியும், 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை செலுத்தி 6 மாதம் கடந்தவர்கள் முன் எச்சரிக்கை தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக செலுத்திக்கொண்டனர்.


Next Story