மீண்டும் கொரோனா அலையா ? - ராதாகிருஷ்ணன் விளக்கம்


மீண்டும் கொரோனா அலையா ? - ராதாகிருஷ்ணன் விளக்கம்
x

தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. 100 க்கு கீழ் இருந்த தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது . ,இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது ;

தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை உறுமாறிய கொரோனா தொற்று பதிவாக தொடங்கியுள்ளது இது கொரோனா அலை கிடையாது.சிறிய ஏற்றம் தான்.நாம் அலர்ட்டாக இருக்க வேண்டும்.வரும் 12ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.அனைத்து இடங்களுக்கும் தேவையான தடுப்பூசி அனுப்பியுள்ளோம்.இதுவரை 11.18 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது .


Next Story