மாநகராட்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


மாநகராட்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையி்ல் மாநகராட்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாணை 152-ஐ தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் ஐவன் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன், அமைச்சு பணியாளர் சங்க தலைவர் முத்துதுரை, ஊரக உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் மாரியப்பன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, இணை செயலாளர் சேரந்தைய ராஜா, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


1 More update

Next Story