நாமக்கல்லில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்


நாமக்கல்லில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 14 Feb 2023 7:30 PM GMT (Updated: 14 Feb 2023 7:30 PM GMT)
நாமக்கல்

நாமக்கல்லில் நேற்று 5,700 மூட்டை பருத்தி சுமார் ரூ.1½கோடிக்கு ஏலம் போனது.

பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 5,700 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

ரூ.1.60 கோடிக்கு விற்பனை

இந்த பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 60 லட்சத்துக்கு விற்பனையானது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 100 முதல் ரூ.8 ஆயிரத்து 539 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரத்து 379 முதல் ரூ.8 ஆயிரத்து 669 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,711 முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும் ஏலம் போனது.

இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. பி.டி. ரகம் பருத்தி குவிண்டாலுக்கு.ரூ.7,399 முதல் ரூ.8,410 வரை 700 மூட்டைகள் ரூ.18 லட்சத்திற்கு விற்பனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 60 மூட்டைகள் எள் வரத்து வந்தது. கருப்பு எள் கிலோ ரூ.149 முதல் ரூ.67 வரையிலும் சிகப்பு எள் கிலோ ரூ.142 முதல் ரூ.164 வரையிலும், வெள்ளை எள் கிலோ ரூ.152 முதல் ரூ.169 வரையிலும் ரூ.9 லட்சத்துக்கு விற்பனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கி வரும் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம் உஞ்சனையில் செயல்படுகிறது. இதில் எள், ஆமணக்கு, துவரை, பாசிப்பயறு, தேங்காய் பருப்பு, கொள்ளு போன்ற விளைபொருட்களுக்கு மறைமுக ஏலம் நடந்தது. எள் கிலோ ரூ.170-க்கும் ஆமணக்கு கிலோ ரூ.73-க்கும், பாசிப்பயிறு கிலோ ரூ.76-க்கும் விற்பனையானது. இதில் திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றதாக நாமக்கல் விற்பனை குழு செயலாளர் தர்மராஜ் தெரிவித்தார்.


Related Tags :
Next Story